மரணம்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே நம் மனதில் ஒரு வகையான அவஸ்த்தை ஏற்படுகிறது. மரண பயம் என்பது எல்லோருக்கும் உண்டு. ‘ஜனனம்’, ‘மரணம்’ போன்றஇரு விஷயங்களுக்கு மட்டுமே விஞ்ஞானத்தால் இன்னும் பதில் சொல்ல இயலவில்லை. எல்லோருக்கும் மரணம் நிச்சயம். ஆனால் எப்பொழுது, எப்படி என்பது தான் சஸ்பென்ஸ் (Suspense). தன்னுடைய மரணத்தை தானே நிச்சயிப்பவர்களும் உண்டு. ‘தற்கொலை’ – தன் வாழ்க்கையைத் தானே முடித்துக் கொள்வது. கோழைகள் எடுக்கும் தைரியமான முடிவு! இந்த நிலையை நாம் பலரிடம் பார்க்கிறோம். தற்கொலை செய்து கொள்வதில் சிறு வயதினரே அதிகம் என ஆய்வுகள் சொல்கின்றன. பெண்களை விட இதில் ஆண்களே அதிகம். இன்னொரு அதிர்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லக்கூடிய உளவியல் நிபுணர்கள் கூட தற்கொலை செய்து கொள்வதுண்டு.
ஒரு இளவயதுள்ள, ஆரோக்கியமான, அசாத்திய திறமையுள்ள ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்றால் அதற்கான காரணம் என்று எதைக் குறிப்பிடுவது? வாழ்க்கையில் நேரிடும் பிரச்சனைகளை சமாளிக்கும் தைரியம் இல்லாத தன்னம்பிக்கை இழந்தவராகத் தான் இருக்க முடியும். தற்கொலை செய்ய தைரியம் இருக்கும் அவர்களுக்கு, பிரச்சனைகளை சமாளிக்கும் தைரியம் இல்லை என்பது தான் வருத்தம்.
சில வருடங்களுக்கு முன்பு எங்கள் அடுத்த வீட்டில் கணவன், மனைவி அவர்கள் பெண் குழந்தை என மூன்று பேர் இருந்தனர். கணவர் மிகவும் நல்ல குணமுடையவர், அமைதியானவர், எப்பொழுதும் அவர் முகத்தில் ஒரு சாந்தம் இருக்கும். இவர் தியானப் பயிற்சி மேற்கொண்டுள்ளாரோ என்றசந்தேகம் எனக்கு அடிக்கடி வருவதுண்டு. ஏனென்றால் அவர் ஒவ்வொரு வேலையையும் மிகப் பொறுமையாக செய்பவர். அதிகம் சத்தம் போட்டுகூட பேசமாட்டார். நல்ல வேலையும், நல்ல சம்பாத்தியமும் உள்ளவர். அவர் குடும்பத்தில், யாரையுமே கடிந்து ஒரு வார்த்தைகூட பேசியதில்லை என்று அவர் மனைவி எங்களிடம் பெருமையாக சொல்வார். அவர்களின் வாழ்க்கை சந்தோஷமாகத்தான் போய்க் கொண்டிருந்தது.
இரண்டு வருடங்கள் கழித்து அவர்கள் வேறொரு வீட்டிற்குக் குடிமாறிச் சென்றனர். அங்கு சென்று 6 மாதங்கள் கழித்து திடீரென்று அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றதகவல் வந்தது. அந்த தகவல் எங்களுக்குப் பயங்கரமான அதிர்ச்சியைத் தந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பங்குச்சந்தையில் ஏற்பட்ட பயங்கர நஷ்டம். ஒரு நல்ல வேலையில் இருக்கும் அவரால், இந்த நஷ்டத்தை எப்படியாவது சமாளிக்கலாம் என்றதன்னம்பிக்கையே வரவில்லை. எல்லா விஷயங்களையும் பொறுமையாக செய்யும் அவர், இந்த விஷயத்தில் அவசரப்பட்டுவிட்டார். அவரது மனம் திடமாக, தன்னம்பிக்கையோடு இருந்திருந்தால் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்காது.
இது போன்று மாணவர்களிடம் தற்போது தற்கொலை எண்ணங்கள் அதிகம் காணப்படுகிறது. தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்கள் பலரும் தங்கள் வாழ்க்கை இதோடு முடிந்து விட்டது என்று எண்ணி தற்கொலை செய்து கொள்கின்றனர். தோல்விகள் தான் வெற்றியின் ஏணிப்படிகள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. தங்கள் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் முழுவதுமாக இழந்து விடுகின்றனர். இது போன்று பல சம்பவங்களை எடுத்துக்காட்டாக கூறலாம். பணத்தட்டுப்பாடு, தொழிலில் தோல்வி, விவாகரத்து, வருங்காலத்தைப் பற்றிய அச்சம் போன்று வாழ்வில் நடக்கும் துயர சம்பவங்களால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் அவர்கள் குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் படும் துன்பங்கள் எத்தனை! தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களில் சிலர் உயிர் தப்பிய பின்னர் வாழ்க்கையின் மகத்துவத்தையும், தங்கள் உறவினர்களின் முக்கியத்துவத்தையும் உணர்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக, எங்கள் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த பெண், அவள் கணவனுடன் வீட்டில் எப்பொழுதும் பிரச்சனை என்று கூறுவாள். மிகவும் சிறிய வயதில் பெற்றோர்களை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்ட அவர்களுக்கு 2 குழந்தைகள். கணவன் பொறுப்பில்லாமல், எந்த வேலைக்கும் செல்லாமல் இருப்பதாகவும், தான் வீட்டு வேலை பார்த்து அதில் வரும் பணத்தையும் தன் கணவர் அநாவசியமாக செலவு செய்வதாகவும் கூறி அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். ஒருநாள் வாக்குவாதம் அதிகமாக, அவள் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தாள். ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தாள். மருத்துவமனையில் 1 மாத காலம் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்பொழுது சரியாக கவனிக்க ஆள்இல்லாததால் அவளது இரு குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாயினர். அதன் பிறகு அவளது தவறைஉணர்ந்து மிகவும் வருத்தப்பட்டாள். அவளுக்கு ஏதேனும் ஒன்று நிகழ்ந்திருந்தால், அந்த குழந்தைகளின் நிலை? இப்படி தற்கொலை செய்து கொள்ளும் ஒவ்வொருவருக்குப் பின்னும் அவதிக்குள்ளாகும் பல ஜீவன்கள் உள்ளன.
ஒருவர் எந்த மனநிலையில் தங்கள் வாழ்க்கையை ஒடுக்கத் தீர்மானிக்கின்றனர்? ‘வாழ்க்கையில் எந்தப்பிடிப்பும் இல்லை, இனி எல்லாம் முடிந்துவிட்டது’ என்று தன்னம்பிக்கையை இழந்த, மிகுந்த மன அழுத்தம் உடையவர்கள் தான் தற்கொலையில் ஈடுபடுகின்றனர். பல சமயங்களில் தனிமையில் இருக்கும் பொழுதுதான் தற்கொலை எண்ணங்கள் அதிகமாகத் தூண்டப்படுகிறது. மனம் திறந்து நாம் நம் பிரச்சனைகளை நம் நண்பரிடமோ, நமக்கு நெருங்கியவரிடமோ பேசினாலே பாதி பாரம் குறைந்தது போல் உணர்வோம். ஒருவர் மன உளைச்சலுக்கு ஆளாகும் போது அவருக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதத்தில் அவரது குடும்பத்தினர் நடந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு மாணவர்கள் தேர்வில் தோல்வியடையும் போது அடுத்த முறைதேர்ச்சி பெறுவதற்கான வழிகளை ஆசிரியர்களும், பெற்றோர்களும் கூறி அவர்களை உற்சாகப்படுத்துதல் (Motivate) வேண்டும். அவர்களை கேலி செய்வதோ, கேவலப்படுத்தவோ கூடாது. சிறு வயதிலிருந்தே நிறைய தன்னம்பிக்கையையும், பிரச்சினைகளை எதிர்த்துப் போராடும் தைரியத்தையும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் வளர்க்க வேண்டும். துன்பமும், துயரமும் வரும்போது தங்கள் குடும்பத்தினர் தங்களுக்கு ஒரு ஊன்றுகோலாக இருப்பார்கள் என்றஎண்ணமே அவர்களை உற்சாகப்படுத்தும், தோல்விகளை எதிர்த்துப் போராடவும் உதவும்.
எனவே, தன்னம்பிக்கையுடன் வாழுங்கள் !
வாழ்க்கையின் மகத்துவத்தை உணருங்கள்!
senthilarasan
உன் தோளில் சாய்ந்து கதை பேசி உன் மடியில் படுத்து கொஞ்சம் தூங்கி உன் சுமைகளை என் சுமையாய் ஏற்று இன்னொரு தாயாய் பாவித்து நட்பு கொள்ளவா
Wednesday, 20 April 2011
Monday, 18 April 2011
தொலை பேசியில் பேசும்போது அனுசரிக்கவேண்டிய பண்புகள்
தொலைபேசியில் பேசுவதற்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன. பெரும்பாலோருக்கு அவைகளைப் பற்றிய விழிப்புணர்வே கிடையாது. போன் என்பது பேசுவதற்குத்தானே, யாரையும் எப்போது வேண்டுமானாலும் கூப்பிட்டுப் பேசலாம் என்று பலர் தவறான எண்ணத்தில் இருக்கிறார்கள்.
விடியற் காலையில் 5 மணிக்குப் போன் வந்தால் என்னைப்போன்ற உள்ளூரில் வசிப்பவர்கள் என்ன நினைப்போம்? யாரோ இன்றைக்கு மண்டையைப் போட்டு விட்டார்கள், இன்றைய பொழுது அவ்வளவுதான் என்று முடிவு செய்துதான் போனை எடுப்போம். செய்தியும் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கும். “இன்றைக்கு என்ன புரொக்ராம்” என்று ஒரு நண்பன் அந்நேரத்தில் கேட்டானென்றால் என்ன நினைப்போம்? பாவி, உன்னை எளவெடுக்க, காலங்கார்த்தாலே ஏண்டா என் தூக்கத்தை கெடுத்தே? என்றுதான் எண்ணுவோம் அல்லவா?
சிலர் அர்த்த ராத்திரியில் போன் பண்ணி, நாளைக்கு அவனைப் பார்க்கப் போகலாமா என்று விசாரிப்பார்கள். அவர்கள் அன்றைக்கு அன்று, தூங்காத ஜாதியைச் சேர்ந்தவர்கள். இரவு 1 மணிக்கு மேல்தான் படுக்கப்போவார்கள். காலையில் 11 மணிக்குத்தான் அவர்களுக்குப் பள்ளியெழுச்சி. நாம காலைல 7 மணிக்கு எழுந்திருச்சு 8 மணிக்கு ஆபீஸ் போறவங்களா இருந்தா, இந்தப் பீடைங்களுக்கு அர்த்த ராத்திரியில என்ன வாழ்த்துச் சொல்றது?
போன் என்பது அவசர, அத்தியாவசியச் செய்திகளைச் சொல்வதற்காக ஏற்படுத்திய சாதனம் என்று என்னைப் போன்ற கிழடுகள் இன்னும் நம்பிக்கொண்டு இருக்கின்றன. வடச்சட்டியில் எண்ணை ஊற்றி அடுப்பில் வைத்து விட்டு, தாளிப்பதற்கு என்னென்ன போடவேண்டும் என்று அமெரிக்காவிலிருந்து, இந்தியாவிலிருக்கும் அம்மாவிற்குப் போன் போட்டுக் கேட்கும் மகள்கள் ஏராளம். “அடியே, நேற்று அந்த சீரியலில் என்ன நடந்தது, எனக்கு நாத்தனார்ப் பீடைகூட கோவிலுக்குப் போகச் சொல்லி அந்தக் கெழம் உயிரைப் பிடுங்கிச்சு, அதனால அந்த சீரியலப் பாக்க முடியல. அதில அவ புருசன் சாகறாப்பில இருந்தானே, அவன் செத்துட்டானா?” என்று அரை மணி நேரம் போனிலேயே கதை கேட்கும் மாமிகளும் உண்டு. அன்றைக்கு வெள்ளிக்கிழமையாக இருக்கும். வீட்டில் மங்களகரமாக நாலு ஸ்லோகம் சொல்றத விட்டுட்டு இந்த எளவு விசாரணை. கதை கேக்கற சுவாரஸ்யத்தில நாளாவது, கிழமையாவது?
சிலர் அவர்கள் வழக்கமாகப் போகும் டாக்டருக்கு போன் செய்து “டாக்டர், வயிற்றில் இடது புறமாக வலிக்கிறது, அன்றைக்கு கொடுத்தீர்களே, அந்த மருந்தைச் சாப்பிடலாமா என்று கேட்பார்கள். என்ன அட்வைஸ் சொல்ல முடியும்? நேரில் பார்க்காமல் ஒன்றும் சொல்ல முடியாதம்மா, நேர்ல வாங்கன்னு சொன்னா, “பார்மசியில கேட்டாக் குடுக்கறான், இந்த டாக்டருக்கு கொம்பு மொளச்சிடுச்சு”, என்று பேசும் மக்கள்தான் அதிகம். இப்படிப்பட்ட சாவு கிராக்கிகள் வராததே நல்லதுக்குத்தான் என்றுதான் பெரும்பாலான டாக்டர்கள் நினைப்பார்கள்.
என்னைப் பொருத்தவரையில் நான் போனில் சொல்லவேண்டியவற்றை சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் போனை வைத்துவிடும் வழக்கமுடையவன். சிலர் அவர்களின் வீட்டுப் பிரச்சினைகளால் ஏற்படும் டென்ஷனைக் குறைக்க இந்தப் போனைப் பயன்படுத்துவார்கள். அவர்கள் பேசுவது நமக்கு ஒரு பிரயோஜனமும் இல்லையென்றாலும் கடனே என்று கேட்டுத்தான் ஆகவேண்டும். ஏனென்றால் போன் பேசுவதில் ஒரு பண்பு, எட்டிக்கெட், என்னவென்றால், யார் கூப்பிடுகிறார்களோ அவர்கள்தான் பேச்சை முடித்து போனைக் கட் செய்யவேண்டும்.
என்னுடைய நண்பர்கள் இருவர் இப்படி போனில் ஒரு நிமிஷம் பேசவேண்டியதை ஒன்பது நிமிஷம் பேசுவார்கள். அவர்கள் பேசும்போது நாம் சும்மாவும் இருக்கமுடியாது. “ஊம்”, “அப்படியா”, “அப்புறம்”, இப்படி ஏதாவது சொல்லிக்கொண்டு இருக்கவேண்டும். இல்லாவிட்டால், என்ன, கேட்டுட்டு இருக்கீங்களா, இல்லே தூங்கிட்டீங்களா, என்று கேள்வி வேறு வரும். இப்படியாக தடவைக்கு ஒரு அரை மணி நேரமாவது அறுப்பார்கள். விஷயம் ஒன்றுமிருக்காது.
இதில் சமீபத்தில் நடந்த ஒரு சோகத்தைக் கேளுங்கள். “குதிரை கீழே தள்ளியதுவுமில்லாமல் குழியும் பறித்ததாம்” என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். இவர்கள் தங்கள் டென்ஷனைக் குறைக்க ஏதோ பேசுகிறார்களே என்று அனுதாபப்பட்டு கேட்கப்போக, என் மீது அபாண்டமான ஒரு குற்றச்சாட்டை சுமத்தினார்கள். அதாவது, நான் அவர்களுடன் போனில் பேசினால் சீக்கிரம் கட் பண்ணி விடுகிறேன், அவர்கள் என்னுடன் பேசினால் நீண்ட நேரம் பேச அவர்களைத் தூண்டுகிறேன், என்று கூறினார்கள். அவர்களுக்கு ஆறுதலாக இருப்போமே என்று பேச்சைக் கேட்கப்போக, குற்றச்சாட்டு என் பேரிலேயே திரும்பி விட்டது. அதாவது அவர்கள் சொல்வது என்னவென்றால் நான் “அடுத்த வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே” என்று அலைகிறேன் என்பதை இவ்வாறு சொல்லி விட்டார்கள். அடுத்தவன் காசில் அனுபவிக்கிற ஜாதி என்பதை இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்.
நான் “எனக்கு வேண்டும், இவர்கள் பேரில் அனுதாபம் காட்டியதிற்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்” என்று என் தலைவிதியை நொந்து கொண்டு இனி மேலாவது புத்தியாய் பிழைக்கவேண்டும் என்று மனதிற்குள் முடிவு செய்துகொண்டேன்.
இந்த நிகழ்ச்சியின் நீதி என்னவென்றால், எந்த வயதிலும் கற்றுக்கொள்ள விஷயங்கள் உண்டு என்பதுதான்.
விடியற் காலையில் 5 மணிக்குப் போன் வந்தால் என்னைப்போன்ற உள்ளூரில் வசிப்பவர்கள் என்ன நினைப்போம்? யாரோ இன்றைக்கு மண்டையைப் போட்டு விட்டார்கள், இன்றைய பொழுது அவ்வளவுதான் என்று முடிவு செய்துதான் போனை எடுப்போம். செய்தியும் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கும். “இன்றைக்கு என்ன புரொக்ராம்” என்று ஒரு நண்பன் அந்நேரத்தில் கேட்டானென்றால் என்ன நினைப்போம்? பாவி, உன்னை எளவெடுக்க, காலங்கார்த்தாலே ஏண்டா என் தூக்கத்தை கெடுத்தே? என்றுதான் எண்ணுவோம் அல்லவா?
சிலர் அர்த்த ராத்திரியில் போன் பண்ணி, நாளைக்கு அவனைப் பார்க்கப் போகலாமா என்று விசாரிப்பார்கள். அவர்கள் அன்றைக்கு அன்று, தூங்காத ஜாதியைச் சேர்ந்தவர்கள். இரவு 1 மணிக்கு மேல்தான் படுக்கப்போவார்கள். காலையில் 11 மணிக்குத்தான் அவர்களுக்குப் பள்ளியெழுச்சி. நாம காலைல 7 மணிக்கு எழுந்திருச்சு 8 மணிக்கு ஆபீஸ் போறவங்களா இருந்தா, இந்தப் பீடைங்களுக்கு அர்த்த ராத்திரியில என்ன வாழ்த்துச் சொல்றது?
போன் என்பது அவசர, அத்தியாவசியச் செய்திகளைச் சொல்வதற்காக ஏற்படுத்திய சாதனம் என்று என்னைப் போன்ற கிழடுகள் இன்னும் நம்பிக்கொண்டு இருக்கின்றன. வடச்சட்டியில் எண்ணை ஊற்றி அடுப்பில் வைத்து விட்டு, தாளிப்பதற்கு என்னென்ன போடவேண்டும் என்று அமெரிக்காவிலிருந்து, இந்தியாவிலிருக்கும் அம்மாவிற்குப் போன் போட்டுக் கேட்கும் மகள்கள் ஏராளம். “அடியே, நேற்று அந்த சீரியலில் என்ன நடந்தது, எனக்கு நாத்தனார்ப் பீடைகூட கோவிலுக்குப் போகச் சொல்லி அந்தக் கெழம் உயிரைப் பிடுங்கிச்சு, அதனால அந்த சீரியலப் பாக்க முடியல. அதில அவ புருசன் சாகறாப்பில இருந்தானே, அவன் செத்துட்டானா?” என்று அரை மணி நேரம் போனிலேயே கதை கேட்கும் மாமிகளும் உண்டு. அன்றைக்கு வெள்ளிக்கிழமையாக இருக்கும். வீட்டில் மங்களகரமாக நாலு ஸ்லோகம் சொல்றத விட்டுட்டு இந்த எளவு விசாரணை. கதை கேக்கற சுவாரஸ்யத்தில நாளாவது, கிழமையாவது?
சிலர் அவர்கள் வழக்கமாகப் போகும் டாக்டருக்கு போன் செய்து “டாக்டர், வயிற்றில் இடது புறமாக வலிக்கிறது, அன்றைக்கு கொடுத்தீர்களே, அந்த மருந்தைச் சாப்பிடலாமா என்று கேட்பார்கள். என்ன அட்வைஸ் சொல்ல முடியும்? நேரில் பார்க்காமல் ஒன்றும் சொல்ல முடியாதம்மா, நேர்ல வாங்கன்னு சொன்னா, “பார்மசியில கேட்டாக் குடுக்கறான், இந்த டாக்டருக்கு கொம்பு மொளச்சிடுச்சு”, என்று பேசும் மக்கள்தான் அதிகம். இப்படிப்பட்ட சாவு கிராக்கிகள் வராததே நல்லதுக்குத்தான் என்றுதான் பெரும்பாலான டாக்டர்கள் நினைப்பார்கள்.
என்னைப் பொருத்தவரையில் நான் போனில் சொல்லவேண்டியவற்றை சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் போனை வைத்துவிடும் வழக்கமுடையவன். சிலர் அவர்களின் வீட்டுப் பிரச்சினைகளால் ஏற்படும் டென்ஷனைக் குறைக்க இந்தப் போனைப் பயன்படுத்துவார்கள். அவர்கள் பேசுவது நமக்கு ஒரு பிரயோஜனமும் இல்லையென்றாலும் கடனே என்று கேட்டுத்தான் ஆகவேண்டும். ஏனென்றால் போன் பேசுவதில் ஒரு பண்பு, எட்டிக்கெட், என்னவென்றால், யார் கூப்பிடுகிறார்களோ அவர்கள்தான் பேச்சை முடித்து போனைக் கட் செய்யவேண்டும்.
என்னுடைய நண்பர்கள் இருவர் இப்படி போனில் ஒரு நிமிஷம் பேசவேண்டியதை ஒன்பது நிமிஷம் பேசுவார்கள். அவர்கள் பேசும்போது நாம் சும்மாவும் இருக்கமுடியாது. “ஊம்”, “அப்படியா”, “அப்புறம்”, இப்படி ஏதாவது சொல்லிக்கொண்டு இருக்கவேண்டும். இல்லாவிட்டால், என்ன, கேட்டுட்டு இருக்கீங்களா, இல்லே தூங்கிட்டீங்களா, என்று கேள்வி வேறு வரும். இப்படியாக தடவைக்கு ஒரு அரை மணி நேரமாவது அறுப்பார்கள். விஷயம் ஒன்றுமிருக்காது.
இதில் சமீபத்தில் நடந்த ஒரு சோகத்தைக் கேளுங்கள். “குதிரை கீழே தள்ளியதுவுமில்லாமல் குழியும் பறித்ததாம்” என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். இவர்கள் தங்கள் டென்ஷனைக் குறைக்க ஏதோ பேசுகிறார்களே என்று அனுதாபப்பட்டு கேட்கப்போக, என் மீது அபாண்டமான ஒரு குற்றச்சாட்டை சுமத்தினார்கள். அதாவது, நான் அவர்களுடன் போனில் பேசினால் சீக்கிரம் கட் பண்ணி விடுகிறேன், அவர்கள் என்னுடன் பேசினால் நீண்ட நேரம் பேச அவர்களைத் தூண்டுகிறேன், என்று கூறினார்கள். அவர்களுக்கு ஆறுதலாக இருப்போமே என்று பேச்சைக் கேட்கப்போக, குற்றச்சாட்டு என் பேரிலேயே திரும்பி விட்டது. அதாவது அவர்கள் சொல்வது என்னவென்றால் நான் “அடுத்த வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே” என்று அலைகிறேன் என்பதை இவ்வாறு சொல்லி விட்டார்கள். அடுத்தவன் காசில் அனுபவிக்கிற ஜாதி என்பதை இப்படிச் சொல்லியிருக்கிறார்கள்.
நான் “எனக்கு வேண்டும், இவர்கள் பேரில் அனுதாபம் காட்டியதிற்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்” என்று என் தலைவிதியை நொந்து கொண்டு இனி மேலாவது புத்தியாய் பிழைக்கவேண்டும் என்று மனதிற்குள் முடிவு செய்துகொண்டேன்.
இந்த நிகழ்ச்சியின் நீதி என்னவென்றால், எந்த வயதிலும் கற்றுக்கொள்ள விஷயங்கள் உண்டு என்பதுதான்.
Subscribe to:
Posts (Atom)

